Monday, November 19, 2007

பிம்பம்...

நேசிக்க தெரிந்த உணர்வை-
உணர வழி இல்லை.
நெஞ்சில் தெரிவது பிம்பம் மட்டுமே
அதை நிஜமாய் பெறவில்லை.
தேடல் சுகமானதே தேடுவது எதுவென்று
தெரியும் வரை.
நினைவை தொலைத்த மனது
நிஜத்தை தேடி அலைகிறது.
நினைவுகள் தொட முடியாத எல்லையில்
என் மனதின் உருவம் உள்ளது-அதை
நேரில் பார்க்கையில் அறிவேனா?
நினைவை மறந்து கடப்பேனா!!!

No comments: